Saturday, February 21, 2009

தீபச்செல்வனின் கவிதைகளை வாசித்தல்

மானுட சோகத்தை இலக்கியத்திற்கூடாகப் புரிந்து கொள்வதென்பது சரித்திரம் குறித்த வரலாற்று ஆவணங்களுக்கப்பால் மனிதசமூகத்தை எதிர்கொள்ளும் முறைமைகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. அதுவும் நாம் வாழும் காலத்தில் நாம் வாழ்ந்த சமூகமானது சொல்லொணாத் துன்பங்களுக்கும், தாங்கொணா அடக்குமுறைகளுக்கும் உட்படுத்தப்பட்டு மிலேச்சத்தனமான இனப்படுகொலை மூலம் அழித்தொழிக்கப்படுகின்ற வேளையில் அச் சமூகத்துக்குள் வாழும் படைப்பாளி ஒருவனால் அவை குறித்த இலக்கியப்பதிவுகள் வெளிப்பாடு கொள்ளும் வேளைகள் அபூர்வமானவை. அத்தகைய அபூர்வதளத்துக்குள் அறுபடாச் சங்கிலியால் தன்னைப் பிணைத்துக் கொண்டு கவி புனையும் தீபச்செல்வன் வன்னி மண்ணின் அவலங்களை உலகத்தின் முகத்தில் ஓங்கியுரைக்கும் சாட்சியமாய் எழுந்து நிற்கிறார். எனவே அவரது கவிதைகளை வாசித்தலும், கேட்டலும் இன்றைய ஈழத்தமிழ்ச் சமூகத்தின் அவலம் நிறைந்த வாழ்வின் மத்தியில் நாம் வாழும் புலம்பெயர் மண்ணில் எமக்கு அத்தியாவசியமாகிறது. ஆகவே இலக்கியத்தையும், மானுடத்தையும் நேசிக்கும் தங்களையும் இவ்வாசிப்பில் கலக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.

காலம் - 22-02-2009 (மாலை 6.00 மணி)
இடம்;; - 36 Salamander Street Scarborough
தொலைபேசி இலக்கம்- (647) 237-3619

வாசிப்பு ஏற்பாடு சார்பாக

murali